யாழ்.போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியவர் உட்பட 26 பேருக்கே இன்று தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியவர் உட்பட 26 பேருக்கே இன்று தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 21 பேர் உட்பட வடக்கில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பான விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 21 போில் 8 பேர் யாழ்.நவீன சந்தையுடன் தொடர்புடையவர்களாவர், மேலும் 7 பேர் திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடையவர்கள். அதிலும் 4 பேர் சந்தை வியாபாரிகள், மிகுதி 3 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பலிருந்தோர். 

இதேபோல் சாவகச்சோி வைத்தியசாலை, பருத்துறை வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலை, வவுனியா வைத்தியசாலை, முல்லைத்தீவு வைத்தியசாலை ஆகியவற்றில் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உடுவில் பகுதியில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையின் 29ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு