யாழ்.மாவட்டத்திலிருந்து வரும் சகலருக்கும் PCR பரிசோதனை..! இன்று அதிகாலை முதல் சிறப்பு நடவடிக்கை ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலிருந்து வரும் சகலருக்கும் PCR பரிசோதனை..! இன்று அதிகாலை முதல் சிறப்பு நடவடிக்கை ஆரம்பம்..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலிருந்து வவுனியா செல்லும் சகலருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

குறிப்பாக பேருந்தில் பயணம் செய்வோருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து, 

வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், 

பாதுகாப்பு கருதி அங்கிருந்து வவுனியாவுக்கு வருகைதரும் பயணிகளிடத்தில் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு