யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உட்பட மாவட்டத்தில் 9 பேருக்கும், வடக்கில் 12 பேருக்கும் தொற்று, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உட்பட மாவட்டத்தில் 9 பேருக்கும், வடக்கில் 12 பேருக்கும் தொற்று, விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டதில் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களாவர். 

மேலும் ஒரு தாதிய உத்தியோகஸ்த்தருக்கும், நிரந்தர ஊத்தியோகஸ்த்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை சண்டிலிப்பாய் பகுதியில் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணிய ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்கள் 3 பேரும் வைத்தியசாலை தாதியர்கள் என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு