யாழ்.கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு..! யாழ்.மாவட்ட செயலர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு..! யாழ்.மாவட்ட செயலர் அறிவிப்பு..

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளையும் பூட்டும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின்  இணைத் தலைவர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுனர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததோடு நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை 

யாழ்.கல்வி வலய பாடசாலைகளை தற்போதுள்ள இடர் காலத்தை கருத்தில்கொண்டு பாடசாலைச் செயற்பாடுகளை இடை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு