குளத்தில் குளிக்க சென்றிருந்த 15 வயது சிறுவனை இழுத்து சென்ற முதலை..! கடற்படை உதவியுடன் தேடுதல்..

ஆசிரியர் - Editor I
குளத்தில் குளிக்க சென்றிருந்த 15 வயது சிறுவனை இழுத்து சென்ற முதலை..! கடற்படை உதவியுடன் தேடுதல்..

குளத்தில் குளிக்க சென்றிருந்த 15 வயதான சிறுவனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் சிறுவனை தேடும் பணிகள் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் மூதுார் - பள்ளிக்குடியிருப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

மேலும் இவ்வாறான ஆபத்துக்களின்போது, விரைவான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒழுங்கான பொறிமுறையொன்று மூதூர் கிழக்கில் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகின்றன என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினாலும் 

மனித வலு மாத்திரம் பயன்படுத்தக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு