திருநெல்வேலி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது..! உள்நுழைவதும், வெளியே செல்வதும் முற்காக தடை, இரு பாடசாலைகள் முடக்கம், மாவட்ட செயலணி தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
திருநெல்வேலி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது..! உள்நுழைவதும், வெளியே செல்வதும் முற்காக தடை, இரு பாடசாலைகள் முடக்கம், மாவட்ட செயலணி தீர்மானம்..

யாழ்.திருநெல்வேலி பாற்பண்ணை பகுதிய கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியிலிருந்து வெளியேறுவதும், உள்நுழைவதும் முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மேலும் முத்துதம்பி வித்தியாலயம், மற்றும் பரமேஸ்வரா கல்லுாரி ஆகியன மறு அறிவித்தல் வெளியாகும்வரை மூடப்படுவதாகவும் மாவட்ட செயலர் கூறியுள்ளார். திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் எடுக்கப்படவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அவசரமாக கூடியது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் தருகையிலேயே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், குறித்த பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியில் செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாவட்டத்தில் மார்ச் 300 மேற்பட்டோருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 143 பேருக்கு தோற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஒரிரு நாள்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து குறைவடையும் என சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.

சுயதனிமைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றிவரை 244 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் மற்றும் யாழ்.மாநகர சுகாதார பிரிவுகளில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

திருநெல்வேலி பாற்பண்ணை பிரதேசம் கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அபாய இடர் வலயமாக திருநெல்வேலி பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும் பரமேஸ்வரா கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் பேசி முடிவுக்கு வந்துள்ளோம். 

அத்துடன், பாற்பண்ணை கிராம மக்கள் வெளியில் நடமாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளோம். அத்தியாவசிய சேவை, தொழில் நிமிர்த்தம் வெளியில் வருகை தருவோர் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து வெளியேற முடியும்.

சிறப்புக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து வெளியில் செல்வோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் விண்ணப்பித்து அனுமதி கிடைத்தால் பயணிக்க முடியும். யாழ்.மாநகர், திருநெல்வேலி நகர் கடைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டால் பாடசாலைக்குச் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு