PCR பரிசோதனைக்கு முண்டியடிக்கும் மக்கள்..! சுகாதார பிரிவினர் அமைதி, PCR செய்யுமிடத்தில் கொரோனா பரவாதா?

ஆசிரியர் - Editor I
PCR பரிசோதனைக்கு முண்டியடிக்கும் மக்கள்..! சுகாதார பிரிவினர் அமைதி, PCR செய்யுமிடத்தில் கொரோனா பரவாதா?

யாழ்.மாநகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் நகரின் ஒருபகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், முடக்கப்பட்ட பகுதி வர்த்தகர்கள், மற்றும் பணியாளர்களுக்கு இன்று PCR பரிசோதனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் PCR பரிசோதனைக்காக வருகை தந்தவர்கள் சமூக இடைவெளியை பேணாது கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு தமது மாதிரிகளை வழங்க நிற்கும் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் விசனத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர். 

PCR பரிசோதனைக்கு சென்று கொரோனா தொற்றை வாங்கி வர போகிறார்களா? என பலரும் படங்களை பகிர்ந்து தமது விசனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இதேவேளை பரிசோதனைக்காக வந்திருப்பார் சமூக இடைவெளி பேணாது கூட்டமாக இருப்பது தொடர்பில் சுகாதார பிரிவினர் பாராமுகமாக இருப்பது தொடர்பிலும் பலர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.


நன்றி :- நிருஜன் செல்வநாயகம்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு