புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனம் கழுவிக் கொண்டிருந்த குடும்பஸ்த்தர் மின்சாரம் தாக்கி பலி..!

ஆசிரியர் - Editor I
புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனம் கழுவிக் கொண்டிருந்த குடும்பஸ்த்தர் மின்சாரம் தாக்கி பலி..!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலுக்கு செல்வதற்காக வாகனம் கழுவிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக 

வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருந்தவேளையில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின் இணைப்பில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபர் மரணமடைந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு