மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த முதியவர்..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Admin
மர்மமான முறையில் வயலில் இறந்து கிடந்த முதியவர்..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

திருகொணமலை கந்தளாய் பகுதியில் வயலக்குள் சென்றிருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாார். 

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கந்தளாய் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகுஇஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு வயலுக்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது விபத்தில் இறந்தாரா? என்பது தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு