சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஆசிரியர் - Editor II
சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி!!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறியதாவது:-

சிறு அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு