திருகோணமலையில் உண்ணாவிரதம் இருக்கும் இருவரின் உடல்நிலை பாதிப்பு!

ஆசிரியர் - Admin
திருகோணமலையில் உண்ணாவிரதம் இருக்கும் இருவரின் உடல்நிலை பாதிப்பு!

திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணவுத் தவிர்ப்புத் போராட்டம் இன்று 7ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் பங்குபற்றிய இருவர் சுகவீனம் அடைந்துள்ளனர்.

கடந்த 7 நாட்களாக 10 பேர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் இருவருக்கு மயக்க நிலை, உடல் சோர்வு, களைப்பு போன்ற சுகவீனங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

இருப்பினும் நாங்கள் இறந்தாலும் எமக்கான நீதி சர்வதேச ரீதியாக கிடைக்கும் வரை தான் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை தொடரப் போவதாக போராட்டத்தில் சுகவீனம் உற்ற இருவரும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு