யாழ்.நகரை அண்டியுள்ள திருநகரில் பொலிஸார் மீது தாக்குதல்..! பொலிஸார் குவிப்பால் பதற்றம், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்டியுள்ள திருநகரில் பொலிஸார் மீது தாக்குதல்..! பொலிஸார் குவிப்பால் பதற்றம், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓட்டம்..

யாழ்.நகரை அண்டியுள்ள திருநகர் கிராமத்தில் குடும்ப தகராறு மோதலாக மாறிய நிலையில் விசாரிக்க சென்றிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து திருநகருக்கு பெருமளவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சகோதர்களில் ஒருவர் யாழ்.மாநகர சபை ஊழியர். ஒருவருக்கு கஞ்சா போதைப்பொருள் விற்பனை தொடர்பில் 3 வழக்குகள் நீதிமன்றில் நடைபெறுகின்றன என்றும் பொலிஸார் கூறினர்.

திருநகரில் நேற்றிரவு குடும்ப தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியிருக்கிறது. அதனால் துவிச்சக்கர வண்டி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு