அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி!

ஆசிரியர் - Admin
அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி!

வட-கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அங்கீகரிக்கவும் இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் சமாதியில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடகிழக்கு தமிழர்களின் தாயகம்,தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள்,இந்திய இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய நாளில் அன்னை பூபதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை ஆரம்பித்தார்.

அகிம்சை ரீதியான போராட்டத்தினை இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாத நிலையில் அன்னை பூபதி தனது உயிரினை தியாகம் செய்தார்.

அன்னாரின் உடலம் நாவலடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு தூபி அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவரது போராட்டத்தின் தியாகத்தினை நினைவுகூரும் வகையில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணி இயக்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வேலன் சுவாமி,கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு