பெற்ற சிசுவை புதைத்த 4 பிள்ளைகளின் தாய்..! வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி நாடகமாடிய நிலையில் கைது..

பெற்ற சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 4 பிள்ளைகளின் தாயான 36 வயதான பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் வவுனியா - பம்பைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த குறித்த தாய் தொடர்பில் சந்தேகம் கொண்ட
ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது.
இதன்போதே குறித்த தாய் தான் பெற்ற சிசுவை தான் வசிக்கும் காணியில் குழிதோண்டி புதைத்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் அந்த குழந்தையை தான் பிரசவிக்கவில்லை என குறித்த தாய் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோது
அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் குறித்த தாயை கைது செய்துள்ள பொலிஸார்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.