இலங்கை அணியின் சரிவுகளை ஆராய ஆணைக்குழு!! -அமைக்குமாறு ரணதுங்க மஹிந்தவிடம் கோரிக்கை-

ஆசிரியர் - Editor II
இலங்கை அணியின் சரிவுகளை ஆராய ஆணைக்குழு!! -அமைக்குமாறு ரணதுங்க மஹிந்தவிடம் கோரிக்கை-

இலங்கை கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் எவ்வாறான சரிவுகள் ஏற்பட்டன என்பதை ஆராய்வதற்காக பொருத்தமான ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அணி, உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்டு இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு, அலரி மாளிகையில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இலங்கையில் கூட ஊழல் ஒழிப்பு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு அணியில் இருந்த வீரர்களை இந்த அலுவலக நிர்வாகம் எவ்வாறு நடத்தியது என்பதையும், கடந்த காலங்களில் கிரிக்கெட்டுக்கு எவ்வாறான சரிவுகள் ஏற்பட்டன என்பதை ஆராய்வதற்காக பொருத்தமான ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்க வேண்டும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு