அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடு..! உடமைகள் எரிந்து நாசம், துாக்கத்தில் இருந்தவர்கள் அதிஸ்ட்டவசமாக தப்பினர்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடு..! உடமைகள் எரிந்து நாசம், துாக்கத்தில் இருந்தவர்கள் அதிஸ்ட்டவசமாக தப்பினர்..

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் வீடொன்று திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் வீட்டிலிருந்த உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் தீயில எரிந்து அழிந்துள்ளன. 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் குடும்பத்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து உறக்கத்திலிருந்து எழும்பிய நிலையில் 

அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.இதனால் வீட்டில் இருந்த கேஸ் அடுப்பு, புடவைகள் கழுவும் இயந்திரம் உட்பட வீட்டு உபகரணங்கள் உடமைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. 

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு