ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள் சீ.வி ஐனாதிபதிக்கு கடிதம்

ஆசிரியர் - Editor I
ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள் சீ.வி ஐனாதிபதிக்கு கடிதம்

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குடும்ப நிலையையும் குறிப்பாக அவருடைய சிறிய பிள் ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஐனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த சுதாகர ன் கடந்த 2008 ம் ஆண்டு தொடக்கம் அரசியல் கை தியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவருடைய மனைவி இற ந்துபோனார்.

மனைவியின் மரண சடங்கிற்காக ஆனந்த சுதாகர ன் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டார். இதன் போது ஆனந்த சுதாகரனின் மகள் தந்தையுடன் இ ணைந்து சிளைச்சாலை பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதனையடுத்து ஆனந்த சுதாகரனின் மகள் ஐனா திபதிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலை யில் இன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ் வரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு