பாலியல் தொழிலாளிகளாக இளம் பெண்களை ஓமான் நாட்டுக்கு அனுப்பிவந்த பெண் வடக்கில் கைது..!

ஆசிரியர் - Editor I
பாலியல் தொழிலாளிகளாக இளம் பெண்களை ஓமான் நாட்டுக்கு அனுப்பிவந்த பெண் வடக்கில் கைது..!

இலங்கை யுவதிகளை பாலியல் தொழிலுக்காக ஓமான் நாட்டுக்கு அனுப்பிய பெண் கைது செய்யப்பட்ட பெண்ணை 26ம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஓமானில் இருந்து வந்த இந்த பெண் குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்திருந்தனர். வவுனியா பம்பைமடு இராணுவ 

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரான பெண் கிரிகொல்ல கிராந்துருகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஆர்.எம். குசுமாவதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்தி வந்துள்ள இந்த பெண், யுவதிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி, ஓமான் சுல்தான்களுக்கு சிறு தொகை பணத்திற்கு பாலியல் தொழிலாளிகளாக 

விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு