யாழ்.மாவட்டத்தில் பதுங்கியுள்ள ஆட்கடத்தல் சூத்திரதாரியை கைது செய்ய விசேட நடவடிக்கை..! பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பதுங்கியுள்ள ஆட்கடத்தல் சூத்திரதாரியை கைது செய்ய விசேட நடவடிக்கை..! பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தகவல்..

கடல்வழியாக கனடாவுக்கு ஆட்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், அவர் யாழ்ப்பாணத்தலிருந்து செயற்பட்டுள்ளார். எனவும் குறிப்பிட்டிருக்கும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

ஒவ்வொருவரிடமும் தலா மூன்று இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை பெற்றுக்கொண்ட குறிப்பிட்ட நபர் அவர்களை கனடாவிற்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார். கல்பிட்டியிலிருந்து படகுகள் மூலம் வெளிநாடொன்றிற்கு செல்ல முயன்ற 24 இலங்கையர்கள் 

கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

கல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான லொறியொன்று காணப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லொறிச்சாரதி உட்பட 24 பேர் படகொன்றிற்காக காத்திருந்தவேளை கைதுசெய்யப்பட்டனர். 

என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின்போது அவர்கள் இலங்கையிலிருந்து வெளிநாடொன்றிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் 

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் ஆறு பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ள கடற்படையினர் லொறிச் சாரதி புத்தளத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் புத்தளத்திலிருந்து லொறி மூலம் கல்பிட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு