யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீள திறக்கப்படுகிறது..! உள்ளக மற்றும் தமிழகத்திற்கான சேவைகளை ஆரம்பிக்கவும் திட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீள திறக்கப்படுகிறது..! உள்ளக மற்றும் தமிழகத்திற்கான சேவைகளை ஆரம்பிக்கவும் திட்டம்..

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடான தமிழகத்திற்கான விமான சேவைகள் மிக விரைவில் மீள ஆரம்பமாகும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். 

மேலும் இரத்மலானை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில்  யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில் 

சுமார் 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வீதியை விடுவிப்பது தொடர்பான விடயம் பேசப்படாமல் இருக்கின்றது. மேலும் மயிலிட்டி சந்தியிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான சேதமடைந்துள்ள வீதியை புனரமைக்க 

வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை வேண்டும் ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு