கடல்வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சி..! கடற்படை நடத்திய முற்றுகையில் 24 பேர் கைது, 2 சிறுவர்கள் உட்பட..

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சி..! கடற்படை நடத்திய முற்றுகையில் 24 பேர் கைது, 2 சிறுவர்கள் உட்பட..

சட்டவிரோதமாக கடல்வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

புத்தளம் – கற்பிட்டி, குரக்கன்ஹேன வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த 24 பேரும் கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்றும், பயணிக்க பயன்படுத்திய லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை தெரிவித்தது. 

இவர்களில் தாயும் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு