மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூவை வழிபாடு நடத்திய இந்திய உயர்ஸ்த்தானிகர்..!

ஆசிரியர் - Editor I
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூவை வழிபாடு நடத்திய இந்திய உயர்ஸ்த்தானிகர்..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு விஜயம் செய்து சிறப்பு பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். 

சுமார் 326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலய புனரமைப்புபணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு, பல தசாப்தகாலமாக இலங்கை - இந்தியா இணைப்பு பாலமாகவிருந்த ராமர்சேது பகுதியில் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, 

இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடையும் என குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு