A-9 வீதியை மறித்து சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..! போக்குவரத்து பாதிப்பு, கண்டுகொள்ளாத அரச அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
A-9 வீதியை மறித்து சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..! போக்குவரத்து பாதிப்பு, கண்டுகொள்ளாத அரச அதிகாரிகள்..

வழங்கப்பட்ட நியமனம் இரத்து செய்யப்பட்டிருப்பதை கண்டித்து சுகாதார தொண்டர்கள் இன்றும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக A-9 வீதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். 

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்றது. தமக்கு வழங்கப்பட்ட நிரந்த நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து 

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்களது போராட்டம் உணவுதவிர்ப்பு போராட்டமாக விரிவாக்கமடைந்துள்ளது.இந்த நிலையில் இன்று முற்பகல் அவர்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.2019ஆம் ஆண்டு ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக 

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதார பணியாளர்கள் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது .எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 

குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரியே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் 

தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு