கனரக வாகனத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி கோர விபத்து..! 20 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..!

ஆசிரியர் - Editor I
கனரக வாகனத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி கோர விபத்து..! 20 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..!

கிளிநொச்சி- தர்ம்புரம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 20 வயதான இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த  கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மோதியதில் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கனரக இயந்திரத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது குணராஜா ஜெனோயன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலியான  இளைஞனின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு