டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை!!

ஆசிரியர் - Editor II
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இந்த ஆண்டு எதிர்வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து ரசிகர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இதில் 47 வீதம் பேர் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்றும் 44 வீதம் பேர் ரசிகர்கள் அனுமதிக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததை அடுத்து வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜப்பான் அரசு மற்றும் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு