யாழ்.மாநகரசபைக்கு புதிய செங்கோல்..! மநகர மக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபைக்கு புதிய செங்கோல்..! மநகர மக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்..

யாழ்.மாநகரசபைக்கு புதிய செங்கோல் அமைக்கப்படவுள்ள நிலையில் செங்கோல் குறித்தும் அதில் இடம்பெறவேண்டிய விடயங்கள் குறித்தும் மாநகர மக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். என மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாநகரசபை அமர்வின்போது குறித்த கோரிக்கை விடுத்தார்.யாழ் மாநகர சபை அமர்வகளில் பாவிப்பதற்காக செங்கோல் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே 

சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய அமர்வின்போது உறுப்பினர்கள் குறித்த செங்கோலை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்துக்களும் பெறப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் பயனாக 

முதல்வர் குறித்த கோரிக்கை விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு