சர்வதேச நீதியை கோரி தீ பந்தங்களுடன் போராட்டம்..! நாளையும் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
சர்வதேச நீதியை கோரி தீ பந்தங்களுடன் போராட்டம்..! நாளையும் போராட்டம்..

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்தும், சர்வதேச நீதியைகோரியும் யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் தீ பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி நல்லை ஆதீனம் முன்பாக, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான 

உணவு தவிர்ப்பு போராட்டம் 9வது நாளாக இன்றும் தொடர்கின்றது.நீதி வேண்டிய இந்த போராட்டம் இடம்பெறும் இடத்திலேயே தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையோடு 

ஆரம்பித்த இந்த தீப்பந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமுக அமைப்பினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு