யாழ்.மயிலிட்டியில் பழமையான இந்து ஆலயம் மற்றும் கிறிஸ்த்தவ தேவாலயம் இடிக்கப்பட்டு இராணுவ மாளிகை கட்டப்பட்டதாக ஒக்லாண்ட் நிறுவம் அறிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மயிலிட்டியில் பழமையான இந்து ஆலயம் மற்றும் கிறிஸ்த்தவ தேவாலயம் இடிக்கப்பட்டு இராணுவ மாளிகை கட்டப்பட்டதாக ஒக்லாண்ட் நிறுவம் அறிக்கை..

யாழ்.மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் சென் மோி தேவாலயம் ஆகியன தரைமட்டமாக இடிக்கப்பட்டு அங்கு இராணுவ மாளிகை கட்டப்பட்டிருப்பதாக அமொிக்காவன் ஒக்லாண்ட் நிறுவனம் சுட்டிக்கட்டியுள்ளது. 

இந்த ஆலயமும் தேவாலயமும் அங்கே இருந்தனவா என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு அவை தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் சுமார் 400 பேருக்கு சொந்தமான 60 ஏக்கர் காணியும் 

இந்த பங்களாவுக்காக இராணுவத்தினரினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.இதேவேளை, வலிகாமத்தில் சில இடங்களை மீள குடியமர்வுக்காக இராணுவம் கடந்த ஆண்டுகளில் அனுமதித்துள்ளபோதிலும், 

அந்த பகுதிகள் தீவிர இராணுவமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அப்பகுதி மக்களின் சகஜ வாழ்க்கையினை மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.காம்கேசன்துறை எல்லையுடனான தையிட்டி கிராமத்தில் 

கெமுனு விகாரை என்ற புதிய விகாரை ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. அங்குள்ள இந்து கோவில் ஒன்றுக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெமுனு விகாரையில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் 7 ஆவது பட்டாலியன் 

இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த 7 ஆவது பட்டாலியன் முகாமுக்கு பக்கத்தில் பிரபல்யமான ஊறணி அந்தோனியார் ஆலயமும் ஊறணி கனிஷ்ட வித்தியாலயமும் இருக்கின்றன. 7 ஆவது பட்டாலியன் முகாமில் இருந்து 1 கிலோ மீற்றர்கள் தொலைவில் 

இராணுவ பொலிஸாரின் முகாம் 15 ஏக்கர் தனியார் காணியில் அமைந்துள்ளது.இராணுவ பொலிஸ் முகாமில் இருந்து ஏறத்தாழ 500 மீற்றர்கள் தொலைவில் மிகவும் விசாலமான 10 ஆவது கள பொறியியலாளார்கள் தலைமையகம் இருக்கிறது. 

இதன் அளவு 2000 ஏக்கர்களுக்கும் அதிகமானது. இது மயியிலிட்டியில் மட்டும் 8 கிராம சேவையாளர் பிரிவுகளை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 200 வருடங்கள் பழைமையான மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் இந்த முகாமை ஒட்டியபடி அமைந்துள்ளது. 

இந்த பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இந்த முகாம் வேலியில் அமைக்கப்பட்டுள்ள வாசல் வழியாகவே செல்லவேண்டும்.யுத்தம் முடியுவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை 

இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு