யாழ்.செம்மணியில் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல்..! அபாயகரமான வெடிபொருட்கள் மறைக்கப்பட்டுள்ளதாம்..

யாழ்.செம்மணி மயானத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய பெருமளவு படையினர், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.
இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.