யாழ்.போதனா வைத்தியசாலை தாதி மற்றும் ஆசிரியை உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை தாதி மற்றும் ஆசிரியை உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதானா வைத்தியசாலையில் 413 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகஸ்த்தர் மற்றும் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 79 வயது மூதாட்டி, 

மேலும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆசரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

அவர்களில் ஒருவர் மல்லாவியில் இடம்பெற்ற மரண சடங்கிற்கு சென்றுவந்தவர் மற்றய ஒருவர் சிறைச்சாலை கைதி, மேலும் ஒருவர் கொழும்பு சென்று திரும்பியவர் என கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு