ஆசிரியை, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உட்பட வடக்கில் இன்று தொற்றுக்குள்ளான 20 பேர் குறித்த விபரம் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
ஆசிரியை, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உட்பட வடக்கில் இன்று தொற்றுக்குள்ளான 20 பேர் குறித்த விபரம் வெளியானது..!

யாழ்.மாவட்டத்தில் 8 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 12 பேருக்குமாக வடமாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பான விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கோரோனா தொற்று 

உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பேருந்தில் முல்லைத்தீவுக்கு சென்று திரும்பியவர். ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 

6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள். மன்னார் நகரில் உள்ள கொமர்ஷல் கிறடிட் நிதி நிறுவனத்தில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மன்னார் நகரில் சலூன் தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு