ரிசப் பன்ட் சதம்: வாசிங்டன் சுந்தர் அரை சதம்!! -வலுவான நிலையில் இந்தியா-

ஆசிரியர் - Editor II
ரிசப் பன்ட் சதம்: வாசிங்டன் சுந்தர் அரை சதம்!! -வலுவான நிலையில் இந்தியா-

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் 2 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இரு அணிகளும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நாணயசுழல்ச்சில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 205 ஓட்டங்களை பெற்றது. 

இதையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்களை பெற்றது. இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. 

அணித் தலைவர் கோலி ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 49 ஓட்டங்கள், புஜாரா 17 ஓட்டங்கள், ரகானே 27 ஓட்டங்களை பெற்று  ஆட்டமிழந்தனர். 

அதேசமயம், ரிசப் பன்ட் - வாசிங்டன் சுந்தர் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தது. ரிசப் பன்ட் சதம் அடித்தார். அவர் 101 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் வாசிங்டன் சுந்தர் அரை சதம் கடந்தார். 

இதன்மூலம் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது. வாசிங்டன் சுந்தர் 60 ஓட்டங்களுடனும், அக்சர் பட்டேல் 11ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு