யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கலந்துகொள்ளவேண்டும்..! சுமந்திரன் முன்மொழிவை வழிமொழிந்த சிறீதரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கலந்துகொள்ளவேண்டும்..! சுமந்திரன் முன்மொழிவை வழிமொழிந்த சிறீதரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன்..

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ள வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்த கோரிக்கையினை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ளவேண்டும் அப்போதுதான் அங்குள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பேசுவதற்கான 

சுமூகமான சூழல் உருவாகும் என்று நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்பு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இணைத்தலைவர்களான கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான 

டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும், வடமாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் அவர்களினதும் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு