நல்லுாரான் வளைவு அமைக்கும் பணிகளுக்காக கோவில் வீதியின் ஒரு பகுதி ஒரு மாதத்திற்கு மூடப்படுகின்றது..! மாநகர முதல்வர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நல்லுாரான் வளைவு அமைக்கும் பணிகளுக்காக கோவில் வீதியின் ஒரு பகுதி ஒரு மாதத்திற்கு மூடப்படுகின்றது..! மாநகர முதல்வர் அறிவிப்பு..

நல்லுாரான் வளைவு கட்டுமான பணிகளுக்காக நாவலர் வீதி தொடக்கம் நல்லுார் கோவில் வரையான கோவில் வீதியை ஒரு மாதத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றார். 

நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக நாளைமறுதினம் மார்ச் 7ஆம் திகதி மணி தொடக்கம் ஒரு மாத காலத்துக்கு இந்தப் போக்குவரத்துத் தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோவில் வீதியுடாகச் செல்லும் சிறிய வாகனங்கள் செட்டித்தெரு வீதி - செட்டித்தெரு ஒழுங்கை ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் 

செட்டித்தெரு ஒழுங்கை - செட்டித்தெரு ஊடாகவும் பயணிக்க முடியும். கனரக வாகனங்கள் இந்தப் பாதையை பயன்படுத்தத் தடை என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு