யாழ்.மல்லாகம் பகுதியில் ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆசிரியர் அனுமதிக்கப்பட்டார்..

யாழ்.மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில்
தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.