பொலிஸார் பூச்சாண்டி காட்டுகின்றனர்..! அவர்கள் தாக்கல் செய்துள்ள பி அறிக்கையின் அடிப்படையில் எதையும் செய்ய இயலாது..

ஆசிரியர் - Editor I
பொலிஸார் பூச்சாண்டி காட்டுகின்றனர்..! அவர்கள் தாக்கல் செய்துள்ள பி அறிக்கையின் அடிப்படையில் எதையும் செய்ய இயலாது..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான சாத்வீக போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பொலிஸார் தக்கல் செய்துள்ள பி அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. பொலிஸார் பூச்சாண்டி காட்டுகின்றனர். 

என தமிழ்தேசியத் தரப்பு சட்டத்தரணிகளால் பருதித்துறை நீதிமன்றில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் பங்குகொண்டமை தொடர்பில் பொலிஸாரால் 

பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பிரமுகர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளும் வாக்குமூலம் பதியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட

நகர்த்தல் பத்திரம் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையில் என்ன குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. இதன்படி சட்டக்கோவையின் பிரகாரம் 

குற்றமிழைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஆனால் இந்த வழக்கினை வைத்து பொலிஸார் பூச்சாண்டி காட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சட்டக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கமுடியாது என்கிற நிலையில் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றமும் உடந்தையாகச் செயற்பட முடியாது என்றும் சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் வலியுறுத்தித் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு