குழந்தைகளுடன் 4வது நாளாகவும் போராட்டம் நடத்தும் சுகாதார தொண்டர்கள்..! பரிதவிப்பை கண்டுகொள்ளாத அதிகரிகள்..

ஆசிரியர் - Editor I
குழந்தைகளுடன் 4வது நாளாகவும் போராட்டம் நடத்தும் சுகாதார தொண்டர்கள்..! பரிதவிப்பை கண்டுகொள்ளாத அதிகரிகள்..

வடமாகாண சுகாதார தொண்டர்கள் ஆளுநர் செயலகம் மன்பாக இன்றும் 4வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். 

தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய 

சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 

குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தரநியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் 

நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி 

போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு