மேற்கிந்தியதீவு அணியை அதிரவைத்த இலங்கை வீரர் அகிலா தனஞ்செயா!! -ஹாட்ரிக் எடுத்து சாதனை-

ஆசிரியர் - Editor II
மேற்கிந்தியதீவு அணியை அதிரவைத்த இலங்கை வீரர் அகிலா தனஞ்செயா!! -ஹாட்ரிக் எடுத்து சாதனை-

ரி-20 ஓவர் சர்வதேச போட்டியில் தொடர்ந்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் வீரர் அகிலா தனஞ்செயா சாதணை படைத்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ரி-20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக மேற்கிந்தியதீவிற்கு சென்றுள்ளது.

இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் மைதானத்தில் (இலங்கை நேரப்படி) நேற்று புதன்கிழமை ஆரம்பமாக இன்று வியாழக்கிழமை அதிகாலை முடிவடைந்துள்ளது. 

இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீரர் அகிலா தனஞ்செயா 3 பந்தில் 3 விக்கெட் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு