இரணைதீவில் சடலங்களை அடக்கும் செய்யும் தீர்மானத்தில் அரசு விடாப்பிடி..! தினசரி 5.30 மணிக்கு இரணைதீவுக்கு சடலங்கள் கொண்டுவரப்படும்..

ஆசிரியர் - Editor I
இரணைதீவில் சடலங்களை அடக்கும் செய்யும் தீர்மானத்தில் அரசு விடாப்பிடி..! தினசரி 5.30 மணிக்கு இரணைதீவுக்கு சடலங்கள் கொண்டுவரப்படும்..

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்யும்போது பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டல்கள் அரசினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இதன்படி உயிரிழந்த நபர்களின் சடலங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விசேட வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ள குறித்த வழிக்காட்டல்களின் பிரதிகள் 16 தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

01. கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் நபரொருவரின் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டுமானால் அவரின் உறவினர்கள் தவறாது சுகாதார பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும்.

02. உயிரிழந்த நபரின் சடலத்தை இனங்காண்பதற்காக இருவர் மாத்திரம் இரணைத்தீவிற்கு செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், இதன்போது முழுமையான சுகாதார பாதுகாப்பு முறை​ம​ கடைக்கப்பிடிக்கப்படும்.

03. ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு இரணைத்தீவை நோக்கி கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

04. சடங்களை அடக்கம் செய்யும் போது அல்லது பெட்டியில் சடலத்தை வைக்கும் போது புகைப்படம் அல்லது காணொளி பதிவு செய்தல் முழுமையாக தடை.

05. சடலம் பெட்டியில் வைக்கப்பட வேண்டும் எனவும் எந்த காரணத்திற்காகவும் அதனை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு