ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல்..! வீட்டில் இருந்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல், நேற்றிரவு சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல்..! வீட்டில் இருந்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல், நேற்றிரவு சம்பவம்..

மட்டக்களப்பு - பாலமீன்மடு பகுதியில் நேற்று இரவு ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

நேற்று இரவு 9.35 மணியளவில் பாலமீன்மடு, புதிய எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக வீட்டின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வாள் மற்றும் பொல்லுகளுடன் வந்தவர்கள் வீட்டின் கேற்றினை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தபோது வீட்டின் உரிமையாளர்கள் வீட்டுக்குள் சென்று கதவினை மூடிய நிலையில் 

வீட்டின் முன்பாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டின் ஜன்னல்களை உடைத்து 

அதன் ஊடாக வாள்களை நீட்டி அச்சுறுத்தல் விடுத்ததாகவும் வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பில் பாலமீன்மடுவிலுள்ள பொலிஸ் காவலரணில் 

முறையிட்டபோதும் அவர்கள் தங்களால் வரமுடியாது எனவும் மட்டக்களப்பில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு கூறியதாகவும் 

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நடைபெற்ற நீண்ட நேரத்திற்கு பொலிஸார் அப்பகுதிக்கு வரவில்லையெனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு