எல்.பி.எல் தொடரில் ஆட்ட நிரணய சதி முயற்சி!! -சச்சித்ர சேனாநாயக்கவிடம் விசேட பிரிவு விசாரணை-

எல்.பி.எல் தொடரில் ஆட்ட நிரணய சதி முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, விளையாட்டுத்துறை முறைகேடுகள் தொடர்பான விசேட விசாரணைப்பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த பிரிவில் இன்று புதன்கிழமை முன்னிலையானார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணை கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.