3 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் கிணற்றில் குதித்த தாய்..! ஒரு குழந்தை பலி, இரு குழந்தைகளை காணவில்லை, தாய் மீட்கப்பட்டார்..

ஆசிரியர் - Editor I
3 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் கிணற்றில் குதித்த தாய்..! ஒரு குழந்தை பலி, இரு குழந்தைகளை காணவில்லை, தாய் மீட்கப்பட்டார்..

கிளிநொச்சி வட்டக்கச்சி - அழகாபுரி கிராமத்தில் 3 பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாய் மீட்கப்பட்டுள்ளபோதும், 

ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 குழந்தைகள் நீரில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டு வருகின்றனர். குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் அழகாபுரி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து எதுவும் கூறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

2ம் இணைப்பு..

குறித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. 

இதன்போது 8 வயது 5 வயது 2 வயது உடைய ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களையும் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறியமுடிகின்றது.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்ற போதிலும் மீட்கப்பட்ட பெண் பதில் ஏதும் கூற மறுப்பதாக 

அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த சிறுவர்கள் அணிந்து சென்ற பாதணிகள் மற்றும் தொப்பி என்பன கிணற்றுக்கு அருகில் காணப்படுகின்றன. கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகள் இடம்பெறவுள்ளது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு