யாழ்.ஊர்காவற்றுறையில் கடற்படை சுற்றிவளைப்பு..! சுமார் 9 ஆயிரம் கடலட்டைகள் மீட்பு, பிடித்தவர்கள் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் கடற்படை சுற்றிவளைப்பு..! சுமார் 9 ஆயிரம் கடலட்டைகள் மீட்பு, பிடித்தவர்கள் தப்பி ஓட்டம்..

யாழ்.ஊர்காவற்றுறை சுமார் 9 ஆயிரம் கடலட்டைகள் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளபோதும் கடலட்டை பிடித்தவர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. கடலட்டை பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்ட கடல் எல்லைக்கு வெளியே கடலட்டை பிடிக்கப்படுவது குறித்து,

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்படையினர் சுற்றிவளைத்திருந்த நிலையில் கடலட்டை பிடித்தவர்கள் தப்பி ஓடிய நிலையில், 

பிடிக்கப்பட்ட கடலட்டைகள் கடற்படையினால் மீட்கப்பட்டிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு