ஓமந்தையில் இராணுவ எச்சரிக்கையை மீறி பயணித்த வாகனம் மீது இராணுவம் துப்பாக்கி சூடு..! இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஓமந்தையில் இராணுவ எச்சரிக்கையை மீறி பயணித்த வாகனம் மீது இராணுவம் துப்பாக்கி சூடு..! இருவர் படுகாயம்..

வவுனியா - ஓமந்தை பகுதியில் இராணுவத்தினரின் எச்சரிக்கையை மீறிய கப் வாகனம் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர், பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த இருவரின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.குறித்த இருவரும் சேமமடு பகுதியை சேர்ந்தவர்களாவர்.

ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி கெப் வண்டி பயணித்துக்கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு