யாழ்.கொடிகாமம் சந்தை மரக்கறி வியாபாரி உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் சந்தை மரக்கறி வியாபாரி உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர்..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 703 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 292 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஏற்கனவே சங்கானை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஆசிரியருடன் 

தொடர்பில் இருந்த 5 பேருக்கும், யாழ்.பல்கலைகழக பொறியியல்பீட கிளிநொச்சி வளாக மாணவன் ஒருவனுக்குமாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 411 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்,

3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 3 போில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு தொற்று உறுதியானதுடன், கொடிகாமம் சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்யும், 

வியாபாரிக்கு எழுமாற்று பரிசோதனையில் தொற்று உறுதியானதாக சுகாதார பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு