யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் பச்சிளம் குழந்தை மீது மூர்க்கத்தனமான தாக்குதல் தாய் கைது செய்யப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் பச்சிளம் குழந்தை மீது மூர்க்கத்தனமான தாக்குதல் தாய் கைது செய்யப்பட்டார்..!

யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் 8 மாத குழந்தை மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாய் தனது குழந்தையை அடிக்கும் வீடியோ காட்சிகள் நேற்றய தினம் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகியிருந்தது.

இது குறித்து ஊடகவியலாளர்கள் அதிக சிரத்தை எடுத்து நல்லூர் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கவனத்திற்கு 

கொண்டு சென்றனர். இந்நிலையில் தமக்கு வேறு தரப்புக்கள் ஊடாகவும் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக கூறிய அதிகாரிகள் மற்றும் பொலிஸார்

இன்று காலை அதிரடியாக மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வீட்டை முற்றுகையிட்டு விசாரணை நடத்தியிருந்தனர். இதப்போது குறித்த பெண்

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளதுடன்,

அவரது கணவன் அரபு நாடு ஒன்றில் பணிக்கு சென்றுள்ள நிலையில் அவர் பிள்ளையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொலிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் 

விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு