காடு வெட்டி கள்ள காணி பிடிப்பதில் தகராறு..! வாள்வெட்டில் 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
காடு வெட்டி கள்ள காணி பிடிப்பதில் தகராறு..! வாள்வெட்டில் 3 பேர் படுகாயம்..

காணி தகராறு முற்றியதில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாந்தை கிழக்கு - ஒட்டறுத்தகுளம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் காட்டை அழித்து இருவர் காணி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இருவருக்கும் இடையில் உருவான தர்க்கம் நேற்று மாலை வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இரு குழுக்களாக மோதிக் கொண்டதில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 பேர் மல்லாவி வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டு பேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காணி அபகரிக்கும் நபர்களுக்கு அரச திணைக்களங்கள் உடந்தையாக காணப்படுவதாகவும் 

இவ்வாறு அறுபது ஏக்கருக்கு மேல் காடு தள்ளப்படும் வரை எவரும் கண்டுகொள்ளாத நிலையிலேயே

இந்த அராஜக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு