பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டம் தொடர்பில் இன்றும் பலரிடம் பொலிஸார் தீவிர விசாரணை..!

ஆசிரியர் - Editor I
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டம் தொடர்பில் இன்றும் பலரிடம் பொலிஸார் தீவிர விசாரணை..!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட்டிருக்கின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், 

மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாகவே நேற்று இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு