சொகுசு காரில் போதைப் பொருள் விநியோகம்..! கணவன் மனைவி கைது..

ஆசிரியர் - Editor I
சொகுசு காரில் போதைப் பொருள் விநியோகம்..! கணவன் மனைவி கைது..

சொகுசு காரில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த கணவன், மனைவியை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சொகுசுக் காரொன்றை வழிமறித்துச் சோதனையிட்டபோது 

அக்காரில் பயணம் செய்த இளம் தம்பதியினரிடமிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. ஓட்டமாவடியைச் சேர்ந்த 31 வயதான கணவனிடமிருந்து 160 மில்லி கிராம் 

 மற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து 140 மில்லிகிராம் ஹெரோயினை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தத் தம்பதியினர் மிகவும் சூட்சுமமான முறையில் பாரிய அளவில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் வியாபாரத்திலீடுபட்டு வருவதாகக் கிடைத்த

இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அவதானித்து வழிமறித்தாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது சந்தேக நபர்கள் பயணித்த சொகுசுக் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது 

அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு