கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சபத்திற்கு இலங்கை, இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை..! ஆனால் உற்சபம் நடக்கும்..

ஆசிரியர் - Editor I
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சபத்திற்கு இலங்கை, இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை..! ஆனால் உற்சபம் நடக்கும்..

யாழ்.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபத்திற்கு தேவையான ஒழுங்கு குறித்து ஆராய படகு ஒன்று நேற்று காலை கச்சதீவுக்கு சென்றிருக்கின்றது. 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இவ்வாறு இடம்பெறும் இந்த ஆண்டிற்கான உற்சவத்தில் கொவிட் 19

வைரஸ் பரவல் காரணமாக இலங்கை - இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் பங்குத் தந்தையர் பூசை வழிபாட்டில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு இடம்பெறும் பூசைக்கு தேவையான பிற ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் 

படகு ஒன்று நேற்றுக் காலையில் கச்சதீவை நோக்கிப் பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்தே பயணித்துள்ளது.

மார்ச் மாதம் இடம்பெற வேண்டிய கச்சதீவு உற்சவத்தில் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்டச் செயலகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற 

கலந்துரையாடலின்போதே அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு